Posts

Showing posts from October, 2023

கம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம் - அனுமப்படலம்

      கம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம் - அனுமப்படலம் ருசியமுகம் மலை மீது அனுமன் இராமனைச் சந்தித்த வரலாற்றைக் கூறுவது அனுமப்படலம்   ருசியமுகம் என்னும் மலை மீது இராமலக்குவனரைக் கண்ட சுக்கிரீவன் , அச்சம் எய்தினார் , சவரி , நெடிது , ஏய மால் வரை எளிதின் ; நொய்தின் ஏறினர் , அதனின் ; நோன்மை சால் கவி அரசு , செய்வது ஓர்கிலன் ; அனையர் தெவ்வர் ஆம் என வெருவி , ' உய்தும் நாம் ' என , விரைவின் ஓடினான் , மலை முழையின் . 1                          சபரி என்பவள் விரிவாக வழிசொல்லி அனுப்பிய காடும் மலையும் கடந்து சென்ற இராமலக்குவர்   பெரிய ருசியமுகம் என்னும் மலைமீது எளிதில் விரைவாக ஏறிச் சென்றனர் . அம்மலையில் இருந்த வலிமை மிக்க குரங்கினத்து அரசனாகி சுக்கிரீவன் வருகின்ற இவர்கள் நம் பகைவராவர் என்று அஞ்சி செய்வது இ ன்னதென்று அறியாதவனாய் ‘ நாம் இப்பொழுது தப்பிப் பிழைப்போம் ' என்று கருதி அம்மலையின் ...